;
Athirady Tamil News

கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!! (படங்கள்)

0

‛இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பரவல், ஊரடங்கு தான் காரணம் எனவும், தாய்நாட்டுக்காக என்னால் முடிந்தவரை சேவை செய்தேன். வருங்காலத்தில் சேவை செய்வேன்” என அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கை 1948 ல் சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஆக்ரோஷமடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஆளும் அரசின் அமைச்சர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தனர். கடந்த 9 ம் தேதி மக்கள் நடத்திய போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறினார். மாலத்தீவு சென்ற அவர் தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்.

கோத்தபய ராஜினாமா

இதையடுத்து கடந்த 14ம் தேதி அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்த்தனேவுக்கு அனுப்பி வைத்தார். இதை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கையில் புதிய அதிபர் தேர்வு ஜூலை 20ல் நடைபெற உள்ள நிலையில் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே வயது 73, நேற்று பதவியேற்றார்.

ராஜினாமா கடிதம் வாசிப்பு

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன் தலைமை வகித்தார். இதில் கேத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டது. அதில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா, ஊரடங்கு ஆகியவற்றை குற்றம்சாட்டி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்க சிறந்த நடவடிக்கை எடுத்ததாகவும், தாய்நாட்டுக்காக முடிந்தவரை சேவை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு

இதுதொடர்பாக கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளதாவது: இலங்கையின் அதிபராக நான் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடியிலும் கூட பொதுமக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்தேன். 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நாட்டில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். இது பொருளாதார நிலையை சிக்கலுக்கு உள்ளாக்கியது.

சிறந்த நடவடிக்கை எடுத்தேன்

மேலும் அந்நிய செலாவணி நிலைமை மோசமடைந்தது. மேலும் நிலைமையை சரிசெய்யும் நோக்கத்தில் அனைத்துக் கட்சியின் அரசை நிறுவி சிறந்த நடவடிக்கை எடுத்தேன். கட்சி தலைவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஜூலை 9 ஆம் தேதி ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். ஜூலை 14 முதல் நான் ராஜினாமா செய்கிறேன். நான் எனது தாய்நாட்டிற்கு என்னால் இயன்றவரை சேவை செய்தேன். எதிர்காலத்திலும் அதை தொடர்ந்து செய்வேன்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

19ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதன்பிறகு இலங்கை நாடாளுமன்றம் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, ஜூலை 20ல் புதிய அதிபருக்கான தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ,முன்னாள் அமைச்சர்கள் அநுரயாப்பா அபேவர்தன, முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம் !!

ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன !!

அனுர குமாரவும் அதிரடி தீர்மானம் !!

இலங்கைக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் – கோட்டாபய ராஜபக்ஷ!!

ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு ! பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு!!

சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!!

ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? (படங்கள்)

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? (படங்கள்)

தினேஷ் குணவர்தன பதில் பிரதமராகவேண்டும் – ஜயகொடி !!

புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக சஜித் அறிவிப்பு!!

இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)

ஜனாதிபதியாக களம் இறங்கும் டலஸ்!!

ரணிலுக்கு மொட்டு ஆதரவு !!

“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? (படங்கள்)

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை!!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!

கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்!!

இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? ‘வைரல் போட்டோ’ போராட்டக்காரர் கூறுவது என்ன? (படங்கள்)

கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!

ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கை!!

பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும்- சபாநாயகர்!!

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி – சபாநாயகர் !!

பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவி பிரமாணம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமருக்கான அறிவிப்பு இன்று !!

ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை – அனுர!!

பதவி விலகல் கடிதம் போலியானது – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !!

நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் – மத்திய வங்கியின் ஆளுநர்!!

கையொப்பமிட்ட கடிதத்துக்காக காத்திருக்கும் சபாநாயகர் !!

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் பரிந்துரை!!

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்! இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து!!

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது – வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை!!

சிங்கப்பூரில் கோட்டாபய அடைக்கலம் கோரவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு!!

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய!

நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும் குடிமக்கள்!! (படங்கள்)

கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!

விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை!!

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா அறிவிப்பு!!

புலிகள் இயக்கத்தை போல போராட்டக்காரர்களை இரண்டாக பிரித்து மோதவிடும் ரணிலின் சதி-எச்சரிக்கும் குரல்கள்!!

தடைப்பட்ட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம்!!

இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு செல்வது ஏன்? அவரை பதவி விலக்கு செய்ய சபாநாயகரால் முடியுமா? (படங்கள்)

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)

நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!

துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!

சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!

முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!

மீண்டும் ஊரடங்கு !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!

இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!

தரையிறங்கியது தனியார் ஜெட் விமானம் !!

மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!

கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய!!

ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!

துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!!

கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – மஹிந்த யாப்பா!!

இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிவிப்பு !!

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்: ஜுலி சங் !!

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா!!

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து! மகாநாயக்க தேரர்கள்!!

ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும் – ரணில்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? (படங்கள்)

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி !!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம்; ’ரணிலின் கேம்’ !!

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.