;
Athirady Tamil News

வீட்டில் அதிகளவான டீசலுடன் ஒருவர் கைது!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் வீட்டில் அதிகளவான டீசல் மற்றும் மண்ணெணணெயினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலக்கு அமைய முள்ளியவளை 4ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சோதனை செய்த வேளை 4 பரல்களில் பதுக்கி வைத்திருந்த 830 லீற்றர் டீசல் மற்றும் 30 லீற்றர் மண்ணெண்ணைய் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 21.07.2022 ஆம் திகதி குறித்த வழக்கிணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முள்ளியவளை பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.