;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 16,935 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் கொரேனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,935 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 67 ஆயிரத்து 534 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து 16,069 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 510 ஆக உயர்ந்தது. தற்போது 1,44,264 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 815 அதிகம் ஆகும். தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 51 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,25,760 ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் நேற்று 4,46,671 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 200 கோடியே 4 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 2,61,470 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.96 கோடியாக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.