;
Athirady Tamil News

கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம் !! (படங்கள், வீடியோ)

0

இலங்கையின் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே போராட்டக்காரர்களை ராஜபக்சேக்கள் பாணியில் ரணில் விக்கிரமசிங்கே ஒடுக்க ராணுவத்தை களமிறக்கியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக அடக்குமுறைகளை மீறி கொழும்பில் போராட்டம் தொடருகிறது.

இலங்கையில் பொதுமக்கள் வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கிறது பொருளாதாரப் பேரழிவு. இதனை சீரமைக்க முடியாததால் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி இரவும் பகலுமாக போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும், ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் விலகினர். மேலும் கோத்தபாய ராஜபக்சே, இலங்கையைவிட்டே தப்பி ஓடி தற்போது சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ளார்.

ஜனாதிபதியாக ரணில்

ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜினாமா செய்த நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை அரசியல் சாசனப்படி அந்நாட்டு நாடாளுமன்ற எம்.பி.க்களால் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து பிரதமர் பதவி காலியானதால் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கொழும்பில் ஒடுக்குமுறை

இந்நிலையில் ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே, கொழும்பு காலிமுகத் திடலில் கூடாரங்கள் அமைத்து போராடிய பொதுமக்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தையும் போலீசையும் களமிறக்கினார் ரணில் விக்கிரமசிங்கே. இதனால் நேற்று நள்ளிரவு முதல் தலைநகர் கொழும்பு போர்க்களமாக மாறிவிட்டது. ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கறுப்பு தினம்

ரணில் விக்கிரமசிங்கேவின் ஒடுக்குமுறைகளைக் கண்டித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி பதவியேற்று முதல் நாளிலேயே சிவில் மக்களை அடக்குவதற்காக ஆயுதப்படையை பயன்படுத்துவது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைதன்மைக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். படையினர் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வது தொடர்பான வீடியோ ஆதரங்கள் வெளியாகி உள்ளன. சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியளாலர்கள் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். ஆகையால் இன்றைய தினம் இலங்கைக்கு கறுப்பு தினமாகும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, கனடா

ரணில் விக்கிரமசிங்கேவின் ராணுவ ஒடுக்குமுறைக்கு அமெரிக்கா மற்றும் ஐநாவின் பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதர் ஜூலி சங் கூறுகையில், நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலை தருகின்றன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.

இதேபோல் ஐநா சபையின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி கூறுகையில், ராணுவத்தின் அடக்குமுறை மிகப் பெரும் கவலை அளிக்கிறது. மக்கள் போராட்டங்களை கண்காணிக்க பத்திரிகையாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கு உரிமை உண்டு என கூறியுள்ளார். ரணிலின் இந்த நடவடிக்கைக்கு கனடா, பிரிட்டன் ,சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே ரணில் விக்கிரமசிங்கேவின் இந்த ஒடுக்குமுறைகளக் கண்டித்து கொழும்பில் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்! (வீடியோ)

இன்று கறுப்பு தினம்: சட்டத்தரணிகள் சங்கம் !! (வீடியோ)

இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்பாரா!!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது!!! (வீடியோ)

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை!!

கோட்டா கோ கம இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்!! (படங்கள், வீடியோ)

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்!! (படங்கள், வீடியோ)

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும் போராட்டக்காரர்கள்!! (படங்கள்)

சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே இலங்கையில் அழிவுக்கு காரணம் – அமெரிக்கா!!

நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம டென்ஷனான ரணில்!!

ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை செய்தாரா? (படங்கள்)

இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ!!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: “போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை” (படங்கள்)

ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

போராட்டக்காரர்களின் நாளைய திட்டம் !!

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்!!

ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல் !!

போராட்டக்காரர்கள் “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும்!!

ஐ.நா படைகள் இலங்கைக்கு வரும்!!

‘பாராளுமன்றம் தீ வைக்கப்படும் என அச்சம்’ !!

சஜித் அணியில் ஒருவர் இராஜினாமா !!

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!

இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)

’ராஜபக்ஷக்களுக்கு நான் நண்பன் இல்லை’ !!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம்!!

இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? (படங்கள்)

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை!!

இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)

திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!

நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!

எமது வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார்- மஹிந்த!!

நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!

இலங்கை ஜனாதிபதியை தெரிவு மறுத்தது இந்தியா!!

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி !!

பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க தடை !!

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்!! (வீடியோ)

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)

புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!! (வீடியோ)

ரணில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்!! (வீடியோ)

ஜனாதிபதித் தேர்தல்: தற்போது கிடைத்த பெறுபேறு!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)

வாக்களித்தார் இரா.சம்பந்தன் ஐயா !! (வீடியோ)

வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார் !! (வீடியோ)

சேலைன் போத்தலுடன் வாக்களித்த எம்.பி !! (வீடியோ)

வாக்கெடுப்பு ஆரம்பம் !! (வீடியோ)

இலங்கையில் அதிபர் தேர்தல்..நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு – மும்முனை போட்டியில் வெல்வது யார்? (படங்கள்)

இலங்கை நெருக்கடி: “அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை” – ஒரு போராட்டக்காரரின் கதை!!

நன்றி தெரிவித்தார் டலஸ் அழகப்பெரும !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.