;
Athirady Tamil News

இலங்கை போராட்டம்: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலி முகத் திடல்!! (படங்கள்)

0

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் குரல் ஆவேசமாக ஒலித்து வந்த, காலி முகத்திடல் இப்போது அமைதியாகக் காணப்படுகிறது. முற்றிலும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அங்கிருக்கும் அதிபரின் செயலகம்.

பெரிய ராணுவ வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதிபரின் செயலகம் இருக்கும் பகுதிக்குச் செல்லக்கூடிய அனைத்துச் சாலைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஊடகங்கள் செல்வதற்குக்கூட அனுமதி அளிக்கப்பட வில்லை.

சாலைகளை அடைத்து தடுப்புகளை வைத்திருக்கும் பகுதிகளில் பலர் போராட்டங்களை நடத்தும் காட்சிகளை வெள்ளிக்கிழமையன்று பார்க்க முடிந்தது. ‘கோட்டா கோ கம’ என்ற பெயரில் போராட்டம் நடந்து வரும் பகுதியில் சுமார் நூறு பேர் வரை ‘அடைபட்டிருப்பதாக’ போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

ஜூலை 9-ஆம் தேதியும் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகும் போர்க்களம் போலக் காட்சியளித்த பகுதியில் இப்போது ராணுவம் மற்றும் காவல்துறையினரைத் தவிர மற்றவர்களைக் காண இயலவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் பிரபலமான நட்சத்திர விடுதிகளும் அரசு அலுவலகங்களும் இருக்கின்றன. அவற்றுக்குச் செல்வோரின் நடமாட்டமும் தடை பட்டிருக்கிறது.

அதிபரின் செயலகம் இருக்கும் சாலையின் இருபுறங்களிலும் நடைபாதைகளில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த தடயமே இப்போது தென்படவில்லை. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அதிபரின் செயலகத்தின் முக்கிய வாயிலை அடைத்துதான போராட்டம் தொடங்கப்பட்டது. பின் நாள்களில் அதில் ஒரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாயில் தடுப்புகளும் மேடையும் இப்போது இல்லை.

அந்த வாயிலை ஒட்டியபடி சாலையின் குறுக்காக ராணுவ வீரர்கள் வரிசையாக நின்றபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவ்வப்போது ராணுவ வாகனங்கள் வந்து செல்கின்றன. அதிபரின் செயலகத்தில் புதிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.

கொழும்பு நகரில் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கணிசமாகக் கூடும் இடமான காலி முகத்திடலை ஒட்டிய கடற்கரையும் இப்போது ஆள் அரவமற்றுக் கிடக்கிறது. சாலையோரக் கடைகள், வண்டிக் கடைகள் ஆகியவையும் தென்படவில்லை.

அதிபரின் செயலகத்தைத் தாண்டியிருக்கும் பகுதிகளில் மட்டும் கறுப்புக் கொடிகள் இன்னும் பறந்து கொண்டிருக்கின்றன. ‘கோட்டா கோ கம’ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள கூடாரங்களும் அப்படியே இருக்கின்றன.

ராணுவத்தினர் அடித்ததில் பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு போராட்டக்காரர் கூறினார்.

காட்சிகள் மாறிய வியாழக்கிழமை

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற கடந்த வியாழக்கிழமையிலிருந்து காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஆலோசனைகளை நடத்தி வந்தார்கள். இருப்பினும் அன்று இரவு வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அன்று காலையிலேயே போராட்டம் நடைபெறும் இடத்தில் பண்டாரநாயக சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த செஞ்சிலுவைச் சங்கத்தின் சிகிச்சை முகாம் அகற்றப்பட்டது.

அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் அதிபரின் செயலகத்தை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டடத்தில் இருந்த கறுப்புக் கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. நடைபாதைகளில் இருந்த கூடாரங்களை மாற்றி அமைப்பதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

காலி முகத்திடல் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குள் ராணுவத்தினர் நுழைந்த தருணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதே இடத்தில் பிபிசி தமிழ் அளித்த நேரலையில்கூட இந்தத் தகவலை போராட்டக்காரர்கள் உறுதி செய்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டத்தை சிறிது அவகாசத்துக்குப் பிறகு தீவிரப்படுத்துவது என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.

கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்களை காலி செய்துவிட்டு அங்கு தென்னங் கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கைகளையும் சில போராட்டக்குழுவின் செய்திருந்தார்கள். அன்று காலையில் இருந்து கூடாரங்களில் இருந்த சிலர் மற்றவர்களிடம் விடைபெற்றுச் செல்வதையும் கவனிக்க முடிந்தது.

அந்தத் தருணத்தில் வெகு சிலர் மட்டுமே அதிபரின் செயலகத்தில் இருந்தார்கள். அந்தக் காட்சி நள்ளிரவு நேரத்தில் மாறியது.

ராணுவத்தின் நள்ளிரவு நடவடிக்கை

வியாழக்கிழமையன்று நள்ளிரவுக்குப் பிறகு செயலகத்தில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் அங்கு பிபிசி தமிழ் குழு அங்கு செய்தி சேகரிக்கச் சென்றது. முதலில் போராட்டக்காரர் ஒருவருடன் சில முகநூலில் நேரலை செய்தோம். அப்போது பெரிய எண்ணிக்கையிலான ராணுவத்தினர் எங்கும் தென்படவில்லை. ஆனால் ஆங்காங்கே கட்டடங்களுக்குப் பின்னாலும் கடற்கரையை ஒட்டிய சாலையிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

முதல் நேரலையை முடிந்த சிறிது நேர இடைவெளியில் ராணுவத்தினர் சாலைகளில் படிப்படியாக அணிவகுக்கத் தொடங்கினார்கள். ஒரு சில நிமிடங்களில் வெவ்வேறு சாலைகளில் இருந்தும் ராணுவத்தினர் திரண்டு வந்தார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு நகரிலும் நாட்டின் பிற நகரங்களிலும் ராணுவத்தின் நடவடிக்கை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை.

கையில் இருந்த லத்திகளைக் கொண்டு சைகை செய்தபடியே கோட்டா கோ கம பகுதியை நோக்கி அனைவரையும் விரட்டிய ராணுவத்தினர். அதே நேரத்தில் பின்னிருந்து வந்த ராணுவத்தின் மற்றொரு குழுவினர் சாலையின் இருபுறங்களில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து உடைத்து, அகற்றினர். சில கூடாரங்களில் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினார்கள்.

ராணுவத்தினருக்கு மத்தியில் சீரூடை இல்லாமல் சாதாரண உடைகளில் இருந்த பலரைக் காண முடிந்தது. அங்கு நடந்த சம்பவத்தைப் படம் பிடிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. கடுமையான குரலில் எச்சரிக்கும் தொனியில் அவர்கள் பேசினார்கள். ஊடகம் என்றும் பிபிசி என்றும் கூறிய போதும் அவர்கள் அதைப் பொருள்படுத்தவில்லை. அப்போதுதான் பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ராணுவம் முன்னேறி வந்தபோது பெண்கள், வயதானவர்கள், உள்ளிட்டோர் போராட்டக்காரர்களில் இருந்தார்கள் அனைவருமே கோட்டா கோ கம என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கி விரட்டிச் செல்லப்பட்டார்கள்.

அந்தத் தருணத்திலேயே ஜனாதிபதி செயலகத்துக்கு வரும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள்ளாகவே ராணுவத்தின் உதவியுடன் தான் பணியாற்றப்போகும் அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

இலங்கை: போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்!!

அதிகாரத்தை ரணில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் !! (வீடியோ)

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து; ஐ.நாவிடம் மகஜர்!! (வீடியோ)

இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது!! (வீடியோ)

“ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்” – சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு!! (வீடியோ)

காலிமுகத்திடல் சம்பவம்:ஐக்கிய நாடுகள் சபை கவலை !! (வீடியோ)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல்; அமைச்சரவை பதவிப்பிரமாணம் !! (வீடியோ)

24 மணி நேரத்திற்குள் சர்வாதிகாரியாக நிரூபித்த ரணில் – சம்பிக்க!! (வீடியோ)

உரிமைகள் மீறல்; மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் !! (வீடியோ)

கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக நாடுகள் கண்டனம் !! (படங்கள், வீடியோ)

பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்! (வீடியோ)

இன்று கறுப்பு தினம்: சட்டத்தரணிகள் சங்கம் !! (வீடியோ)

இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்பாரா!!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது!!! (வீடியோ)

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை!!

கோட்டா கோ கம இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்!! (படங்கள், வீடியோ)

இலங்கை ராணுவம் நள்ளிரவில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: பிபிசி தமிழ் செய்தியாளரும் தாக்கப்பட்டார்!! (படங்கள், வீடியோ)

கொழும்பு அதிபர் செயலகத்தில் பாதுகாப்பு படைகள் அதிகரிப்பு. நள்ளிரவில் குவியும் போராட்டக்காரர்கள்!! (படங்கள்)

சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே இலங்கையில் அழிவுக்கு காரணம் – அமெரிக்கா!!

நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம டென்ஷனான ரணில்!!

ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை செய்தாரா? (படங்கள்)

இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ!!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: “போராட்டத்தில் ஜனநாயக விரோதமாக ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை” (படங்கள்)

ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?

போராட்டக்காரர்களின் நாளைய திட்டம் !!

ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்!!

ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல் !!

போராட்டக்காரர்கள் “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும்!!

ஐ.நா படைகள் இலங்கைக்கு வரும்!!

‘பாராளுமன்றம் தீ வைக்கப்படும் என அச்சம்’ !!

சஜித் அணியில் ஒருவர் இராஜினாமா !!

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!

இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)

’ராஜபக்ஷக்களுக்கு நான் நண்பன் இல்லை’ !!

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம்!!

இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவின் தெரிவில், தமிழ் எம்.பிக்களின் பங்களிப்பு என்ன? (படங்கள்)

8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை!!

இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை சீரமைப்பாரா? (படங்கள்)

திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!

நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!

எமது வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார்- மஹிந்த!!

நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!

இலங்கை ஜனாதிபதியை தெரிவு மறுத்தது இந்தியா!!

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி !!

பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க தடை !!

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்!! (வீடியோ)

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)

புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!! (வீடியோ)

ரணில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்!! (வீடியோ)

ஜனாதிபதித் தேர்தல்: தற்போது கிடைத்த பெறுபேறு!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)

வாக்களித்தார் இரா.சம்பந்தன் ஐயா !! (வீடியோ)

வாக்களிப்பை புறக்கணித்தார் கஜேந்திரகுமார் !! (வீடியோ)

சேலைன் போத்தலுடன் வாக்களித்த எம்.பி !! (வீடியோ)

வாக்கெடுப்பு ஆரம்பம் !! (வீடியோ)

இலங்கையில் அதிபர் தேர்தல்..நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு – மும்முனை போட்டியில் வெல்வது யார்? (படங்கள்)

இலங்கை நெருக்கடி: “அன்று சாப்ட்வேர் எஞ்சினீயர், இன்று செருப்புகூட இல்லை” – ஒரு போராட்டக்காரரின் கதை!!

நன்றி தெரிவித்தார் டலஸ் அழகப்பெரும !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.