;
Athirady Tamil News

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்- தமிழிசை சவுந்தரராஜன், ரஜினிகாந்த் வாழ்த்து..!!

0

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று தொடங்குவதையொட்டி தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- உலக அரங்கில் நமது இந்திய திருநாட்டின் பெருமையை நிலைநாட்டக்கூடிய பிரமாண்டமான செஸ் போட்டி நம் நாட்டில் குறிப்பாக நம் தமிழ் மண்ணில் நடைபெறுகிறது. எப்போதுமே விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட இருக்கும் செஸ் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள். நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- செஸ் நான் மிகவும் விரும்பும் உள் அரங்க விளையாட்டு. செஸ் வீரர்கள் சிறப்பாக ஆட வாழ்த்துகிறேன். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம்:- தமிழ்நாட்டில், பல்லவ மன்னன் கலைச் சிற்பங்கள் இருக்கின்ற மாமல்லபுரத்தில் உலகமே கூடிவந்து சதுரங்கம் ஆடுவது, தமிழ் மண்ணுக்குப் பெருமை தருவதாகும். இந்த உலக வரலாற்று நிகழ்வுதனைத் துவக்கி வைக்க வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியையும், இப்பெருவிழாவை மிகப் பிரமாண்டமாக நடத்து கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டி மகிழ்கின்றேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.