;
Athirady Tamil News

வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!! (படங்கள்)

0

வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு

வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர (கியூ ஆர் கோட்) முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமமைந்துள்ள சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் இளைஞர் சேவைகள் மன்றத்தினரால் கியூ ஆர் கோட் பதிவு செய்யப்படுவதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, கியூஆர் கோட் பெற்றுக் கொள்ளாதாவர்கள் மற்றும் செல்லுபடியற்ற வகையில் கியூ ஆர் கோட்டினை கொண்டு வருபவர்களுக்கு வவுனியா ஊடக அமையத்தினரால் கியூஆர் கோட் பெற்றுக் கொடுக்கப்பட்டும் வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.