;
Athirady Tamil News

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுதினம் முன்னெடுப்பு! (படங்கள்)

0

படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைகூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கலாநிதி நீலன் திருச்செல்வனின் நினைவுதினம் இன்று பிற்பகல் மூளாய் சுழிபுரத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையில் பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றது

இதன் பொழுது கலாநிதி நீலன் திருச்செல்வம் தின் திருவுருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தலின் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன்,பிரத்தியேக செயலாளர் கௌதமன்,அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தங்கமுகுந்தன்,கௌரிகாந்தன் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.