;
Athirady Tamil News

பூந்தமல்லி அருகே 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்- பக்தர்கள் தரிசனம்..!!

0

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 9-ம் நாளான நேற்று அம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் முகப்பு முதல் அம்மன் கருவறை வரை ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலை மற்றும் வளையல் மாலை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தன. விழாவை -யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பூவை ஞானம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.