;
Athirady Tamil News

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வீடியோ கேமில் மூழ்கி இருந்த பெண் கவுன்சிலர்..!!

0

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. 200 கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்ய வில்லை. மழைநீர் கால்வாய் பணிகள் முறையாக நடக்க வில்லை. காரணம் சொல்லாமலே அதிகாரிகள் அபராதம் போடுகிறார்கள். கவுன்சிலர்கள் சாலைகளை சீர் செய்ய எழுதி கொடுத்தால் அதிகாரிகள் நிராகரிக்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சினைகளை மன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து கவுன்சிலர்கள் விவாதித்து கொண்டிருந்தார்கள். பரபரப்பாக கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் மடிப்பாக்கம் 188-வது வார்டு கவுன்சிலர் சமீனா செல்வம் தனது செல்போனில் வீடியோ கேம் விளையாட்டில் விறுவிறுப்பாக இருந்தார். கேமிரா காட்சிகளுக்குள் சிக்கிய இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மன்ற கூட்டங்களில் சக கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை எப்படி பேசுகிறார்கள். முக்கியமான தீர்மானங்கள் மீது எப்படி விவாதிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். தங்கள் பகுதி பிரச்சினைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் காதுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதில் தான் கவுன்சிலர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு இப்படி செல்போனில் விளையாடுவதில் கவனமாக இருந்தால் வார்டு பிரச்சினையை கவனிப்பது யார்? என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.