;
Athirady Tamil News

புதிய வகை டெங்கு காய்ச்சல் பரவல் !!

0

டெங்கு காய்ச்சலின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்படின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய வலியுறுத்தினார்.

இதனால், டெங்கு நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் விசேட வைத்திய நிபுணர் மக்களை கேட்டுக்கொண்டார்.

அத்துடன், சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் அல்லது காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும் தொண்டைவலி, காய்ச்சல், இருமல், சளி போன்றவை புதிய வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.