;
Athirady Tamil News

ஆகஸ்டு மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்..!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார். 2-ந்தேதி கருடபஞ்சமியையொட்டி கருடசேவை, 6-ந்தேதி தரிகொண்டா வெங்கமாம்பா பிறந்த நாள், 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம், 9-ந்தேதி நாராயணகிரி பூங்காவில் சத்ரஸ்தாபனோற்சவம், 11-ந்தேதி சிரவண பவுர்ணமி, ரக்‌ஷா பந்தம் பண்டிகை, வைகானச மகாமுனி ஜெயந்தி. 12-ந்தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, உற்சவர் மலையப்பசாமி வைகானச சன்னதிக்கு எழுந்தருளல், 15-ந்தேதி சுதந்திர தினம், 19-ந்தேதி கோகுலாஷ்டமி ஆஸ்தானம், 20-ந்தேதி உறியடி உற்சவம், 29-ந்தேதி பலராமர் ஜெயந்தி, 30-ந்தேதி வராஹ ஜெயந்தி, 31-ந்தேதி விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி விழா). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.