;
Athirady Tamil News

கிருஷ்ணன் கோவிலில் வளையல் திருவிழா..!!

0

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் திருவிழா நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வளையல்கள் கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தினர். பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்து வளையல்களை வாங்கி சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.