;
Athirady Tamil News

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கினார்!!

0

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கிக் கொண்டார். மேலும் இருவர் தப்பித்துள்ளனர்.

வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்திய வந்த நிலையில் ஒருவர் ஊர் இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

இன்று இரவு 8.15 மணியளவில் சங்கரத்தைச் சந்தியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வட்டுத்தெற்கு மற்றும் மூளாய் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு வாள்களுடன் நடமாடியுள்ளனர்.

இன்று இரவும் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் நடமாடியுள்ளனர். அதனை அவதானித்த வட்டுக்கோட்டை இளைஞர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு வழிமறிக்க முற்பட்ட வேளை மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்துள்ளனர்.

அவர்களில் இருவர் வாள்கள் இரண்டை கைவிட்டு தப்பித்த நிலையில் ஒருவர் காயங்களுடன் சிக்கிக்கொண்டார்.

வாள்களுடன் சிக்கிக்கொண்ட மூளாயைச் சேர்ந்தவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டு வாள்கள் மற்றும் மோட்டார்களையும் பொலிஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.