;
Athirady Tamil News

‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார். .இலங்கை அதிபர் ரணில் பேச்சு!! (படங்கள்)

0

சிங்கப்பூரில் இருந்து வரும் கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவேன் என்றுகூறி வந்த நிலையில், ‘கோத்தபய ராஜபக்சேவிடம் தான் பேசிக்கொண்டு தான் இருப்பதாகவும், தற்போதைக்கு அவர் நாடு திரும்ப மாட்டார் எனவும்’ இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் திண்டாடினர்.

பண வீக்கம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டியது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது

வரலாறு காணாத வன்முறை

இதன் காரணமாக பெட்ரோல், டீசல், அத்தியாவசிய மருந்து பொருட்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு நிலவியது. எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு, அத்தியாவசிய மருந்து பொருட்கள் என எதற்கும் தட்டுப்பாடு நிலவியதால், தவித்து போன இலங்கை மக்கள் தலைநகர் கொழும்புவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் வரலாறு காணாத வன்முறையும் வெடித்தது. தங்களின் இந்த மோசமான நிலைக்கு காரணமான ராஜபக்சே குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டம் தீவிரம் அடைந்தது.


நாட்டை விட்டு ஓட்டம்

இதனால், பதறிப்போன மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஆனால், நான் பதவியில் இருந்து விலக மாட்டேன் என அடம் பிடித்துக்கொண்டு அதிபர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்த கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகைக்குள் மக்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, நிலமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறியதோடு, கடந்த மாதம் 13-ந் தேதி அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது சிங்கப்பூரில் இருந்து வரும் கோத்தப்பய ராஜபக்சே நான் நாட்டை விட்டு ஓடவில்லை என்றும், விரைவில் இலங்கை வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நிலைமை மேலும் மோசமாகும்

இதற்கிடையே, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு இலங்கையை மறுகட்டமைக்க உதவ வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த ரணில் விக்ரமசிங்கே, ”முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு இது உகந்த நேரம் இல்லை என்றும், கோத்தபய ராஜபக்சே தற்போதைய அரசியல் சூழலில் இலங்கைக்கு வந்தால் நிலைமையை மேலும் கொந்தளிப்பாக்கி விடும்” என்றும் கூறினார்.

குடும்பத்தினருடன் சிங்கப்பூரில். .

மேலும், நிர்வாக காரணங்கள் மற்றும் அரசின் பிற செயல்பாடுகள் தொடர்புகளுக்காக கோத்தபய ராஜபக்சேவுடன் தொடர்பில் இருப்பதாகவும், கோத்தபய ராஜபக்சே தற்போதைக்கு திரும்புவது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார். இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சம் பெற்றதையடுத்து, நாட்டில் இருந்து வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே, தொடர்ந்து சிங்கப்பூரிலேயே இருக்கிறார். கோத்தபய ராஜபக்சேவுடன் அவரது மனைவி லோமா ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே உள்பட குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மேலும் சிலரும் சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர் தான் தலைவர்; மொட்டுக் கட்சி அறிவிப்பு !!

’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!

2 ராஜபக்‌ஷர்களுக்கு பயணத்தடை நீடிப்பு !!

செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!

ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.