;
Athirady Tamil News

ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில், பிரதிவாதியாக தற்போ​தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். பிரதிவாதியிலிருந்து நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானமே, எழுவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ​இன்று (02) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனெக அலுவிஹா​ர, பிரியந்த ஜயவர்தன, எல்.டீ.பீ தெஹிதெனிய, மூதூர் பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு அழைக்கப்பட்ட போது பிரதிவாதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதால், பிரதிவாதி என்பதில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவின் நீக்கவேண்டுமென நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கான விடுவிப்பு சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் மட்டுமே உள்ளன. இது அடிப்படை உரிமை மீறல் வழக்காகும் என்பதால், பிரதிவாதியாகவே அவர் பெயர் இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் சார்பில் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் கருத்துகளுக்கு இணக்குவதாகவும் அதனடிப்படையில், ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகியிருந்து மேலதிக சொலிஸிட்டர் ஜெனரால் பிரியந்த நவா​ன, அரசியலமைப்பின் 35(1) உறுப்புரையின் கீழ், ஜனாதிபதிக்கு விடுவிப்பு உரித்துடையதாகும். அதற்கு எதிராக, பதவி நிலையிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. ஆகையால் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருக்கும் ஜனாதிபதியை விடுவிக்கவேண்ணடும் எனக் கேட்டுக்கொண்டார்.

முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொண்டு, கட்டளையை பிறப்பிப்பதை பின்னர் ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இலங்கைக்கு வரும் சீனாவின் உளவு கப்பல்… ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கல்!

‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார். .இலங்கை அதிபர் ரணில் பேச்சு!! (படங்கள்)

இவர் தான் தலைவர்; மொட்டுக் கட்சி அறிவிப்பு !!

’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!

2 ராஜபக்‌ஷர்களுக்கு பயணத்தடை நீடிப்பு !!

செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!

ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.