;
Athirady Tamil News

காமன்வெல்த் – டேபிள் டென்னிஸ், பளு தூக்குதலில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!!

0

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் டேபிள்டென்னிசில் இந்தியாவின் சரத் கமல், சத்யன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஆகியோர் தங்கமும், பளு தூக்குதலில் இந்தியாவின் விகாஸ் தாகூர் வெள்ளியும் வென்றனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ், பளு தூக்குதலில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற விகாஸ் தாக்கூர் இம்முறை காமன்வெல்த் போட்டியில் அதிக புகழ் பெற்றுள்ளார். அவர் பெற்ற வெற்றியில் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. வரவிருக்கும் முயற்சிகளுக்கு அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.