;
Athirady Tamil News

யாழ்.போதனாவிற்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்கிய எஸ்.கே.நாதன் அறக்கட்டளை!!

0

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு தேவையான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்கள் எஸ்.கே.நாதன் அறக்கட்டளையினால் நேற்றையதினம் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் எஸ்.கே.நாதன் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குனர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் மருந்துப் பொருட்கள் வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருந்தாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.