;
Athirady Tamil News

மாவிட்டபுரத்தானுக்கு கோடி நாமாஞ்சலி ஆராதனை – உபயங்களை ஏற்க விரும்புபவர்கள் ஆலயத்தினருடன் தொடர்பு கொள்ளவும்!! (படங்கள்)

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் ஹிரண்யம், புஷ்பபத்மம், பஞ்சவில்வபத்ரம், ருத்திராக்ஷம், மூலிகைகள் சகிதம் கோடி நாமாஞ்சலி ஆராதனை கடந்த திங்கட்கிமை முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 2023ஆம் ஆண்டு 26ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது

தினமும் காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை 10 ஷண்முகார்ச்சனைகளுடன் 179 நாட்களில் கோடி நாமாஞ்சலி சகிதம் ஆராதனைகளும் நடைபெறவுள்ளது.

சங்கல்ப பலாபலன்கள்:

சுகவாழ்வு வாழ, தொழில் லாபம் பெற, சந்தானம் பெருக, நிலம் அமைய, வியாபாரம். விவசாயம் துவங்க. விருத்தியடைய, குடும்ப சகிதமாக நல்வாழ்வுவாழ, கல்வி பெருக, களத்திரதோஷம் திருமாங்கல்ய தோஷம் நீங்க, சகல சாபங்கள், பாவங்கள் நிவர்த்தியாக, பிரயாண தடங்கல் நீங்க, பொன், தங்கம், வெள்ளி. இரத்தினம் பொருள் பெருக, அபிவிருத்தி அதிர்ஷ்ட லாபம் பெற, சகல கீவராசிகள் சுகவாழ்வு வாழ, சகல கஷ்டங்கள், தொல்லைகளகன்று. நினைத்த நற்காரியங்கள் கைகூட, உலகத்தில் சாமாதானம், சாந்தி நிலவி ஒற்றுமை மேலோங்க, நோயற்ற நீண்ட வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெற, அகிலத்தில் வாழும் மக்கள் இன. மத, மொழி, வேறுபாடுகள் இன்றி சமாதானமாக ஒற்றுமையாக அமைதியான வாழ்க்கை வாழ வேண்டி, சூரிய, சந்திர, நட்சத்திரங்கள், ஆத்மா, பஞ்சபூதங்களுடன் இஷ்டதெய்வங்கள், குலதெய்வங்களின் ஆசிகள் பெறுவர்

இவ் ஆராதனை நிகழ்வுகளில் உபயங்களை ஏற்று நடாத்த விரும்புபவர்கள் ஆலய தொலைபேசி இலக்கங்களான 021-2243334, 077-1042257 தொடர்பு கொள்ளுமாறு ஆலயத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.