;
Athirady Tamil News

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை – ராகுல் காந்தி விமர்சனம்..!!

0

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:- இந்தியாவில் சிறு, நடுத்தர தொழில்கள் மூலம் கிடைக்கும் எதுவும் இந்தியாவுக்கு வேண்டாம் என்று பாஜக விரும்புகிறது. தங்களுக்குப்பிடித்த 2-3 பெருமுதலாளிகளிடமிருந்து மட்டுமே அனைத்தும் வர வேண்டும் என பாஜக நினைக்கிறது. மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து பெரு முதலாளிகளிடம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முழு எண்ணம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.