;
Athirady Tamil News

மீசாலை வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவிலில் திருப்பணிச் சபை அங்குரார்ப்பணம்!! (படங்கள்)

0

மீசாலை வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவிலில் திருப்பணிச் சபை அங்குரார்ப்பணம்……………………மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் கோவிலின் திருப்பணிச் சபையின் அங்குரார்ப்பண நிகழ்வு – ஆலயக் கொடியேற்றத் திருவிழாவின் நிறைவில் 02.08.2022 இடம்பெற்றது.

திருப்பணிச் சபை உறுப்பினரும் பாடசாலை அதிபருமாகிய தி.அபராஜிதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய முகாமையாளர் சி.இராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஆலய மகோற்சவ குரு சிவஸ்ரீ சி. கிருபாகரக் குருக்கள் ஆசியுரை வழங்கினார். செந்தமிழ்ச்சொல்லருவி ச. லலீசன் – ஆலயத்தின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்துச் சிறப்புரை ஆற்றினார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் அ.கயிலாயபிள்ளை நிறைவுரையாற்றினார்.

ஆலயத்தின் உள்வீதிக் கொட்டகை மற்றும் நிலம் என்பவற்றைப் புனரமைக்கும் திருப்பணி வேலைகள் இடம்பெறவுள்ளன. இதற்கு முதற்கட்டமாக ஆலய அடியவர்கள் ஆலய முகாமையாளரிடம் சம்பிரதாயபூர்வமாகத் தமது திருப்பணிசார் பங்களிப்புகளை வழங்கினர்.

ஆலய பக்தர்களாக உள்ள இளைஞர்களை உள்ளடக்கி திருப்பணிச் சபை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.