;
Athirady Tamil News

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளரின் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், இன்று (04) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம், கல்லூரியின் அதிபர் எம்.அரிபூரணநாதன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், ஜனநாயக ரீதியில் உரிமைக்காக போராடிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் கைது செய்யப்பட்டமைக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம் என்பதனை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், அடக்காதே அடக்காதே ஆசிரியர்களை அடக்காதே, மதிக்கப்பழகு ஆசிரியர் சமூகத்தை மதிக்கப்பழகு, தேவையற்ற கைதுகளை நிறுத்து, கைது செய், கைது செய், அரசியல் ரவுடிகளை கைது செய், விதலை செய், விடுதலை செய் ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய், விரோதங்களை வளர்க்காதே போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.