;
Athirady Tamil News

நெய்வேலி என்ஜினீயர் பணி நியமன விவகாரம்: மத்திய மந்திரியுடன் டி.ஆர்.பாலு ஆலோசனை..!!

0

நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 299 என்ஜினீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் ஒரு தமிழர் கூட இல்லை. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசின் கவனத்துக்கு இதனை கொண்டு சென்றார். இதன் அடிப்படையில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிலக்கரி-சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் ஆகியோருடன் டி.ஆர்.பாலு பங்கேற்கும் நேரடி ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி இந்த ஆலோசனை டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது டி.ஆர்.பாலு முதல்-அமைச்சரின் கருத்துகளை முன் வைத்தார். மந்திரியும், அதிகாரிகளும் அதற்கான விளக்கங்களை அளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.