;
Athirady Tamil News

கடந்த 8 ஆண்டுகளில் ரெயில்வேயில் 3½ லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது – மத்திய மந்திரி தகவல்..!!

0

ரெயில்வேயில் வேலைவாய்ப்புகள் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘2014 முதல் 2022 வரையிலான கடந்த 8 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 204 பேருக்கு ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டு உள்ளது. 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிலும் ரெயில்வே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளது. இதன் கீழ் மேலும் 1.40 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் விரைவில் முடிக்கப்படும்’ என்று கூறினார். ரெயில்வேயில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 18 ஆயிரம் பேர் பணி வாய்ப்புகளை பெற்றிருப்பதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்திய ரெயில்வே மிகப்பெரும் பங்காற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.