;
Athirady Tamil News

பூரி ஜெகநாதர் கோயிலில் தீ விபத்து..!!

0

ஒடிசாவில் உள்ள பூரி ஜகநாதர் கோவிலில் உள்ள சமையலறை கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவிலில் பிரசாதம் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உள்ளிட்ட சமையலறைப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள ‘சரா காரா’ என்ற இடத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென பரவிய தீயை கோவில் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.