;
Athirady Tamil News

கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி..!!

0

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரத்தில் அமைதி பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் கருணாநிதியின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் ஏந்தி, புறப்பட்ட அமைதி பேரணி பாவூர்சத்திரம் பஸ் நிலையம் சென்றடைந்து. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதில் தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், ஜெயகுமார், அன்பழகன், யூனியன் தலைவிகள் காவேரி, திவ்யா மணிகண்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.