;
Athirady Tamil News

தமிழகத்தில் மேலும் 1,057 பேருக்கு கொரோனா..!!

0

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 29 ஆயிரத்து 066 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,057 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 234 பேர், கோவையில் 122 பேர், செங்கல்பட்டில் 90 பேர் என அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுவரை 38 ஆயிரத்து 33 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 889 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,429 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.