;
Athirady Tamil News

யாழில். நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றத்தில் நால்வர் கைது!!

0

யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவான் பகுதிகளில் அண்மைக்காலமாக நீர் இறைக்கும் மின் மோட்டார்கள், நீர் பம்பிகள் திருடப்பட்டு வந்துள்ளன.

இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் நான்கு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான 7 நீர் இறைக்கும் மின் மோட்டார்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.