;
Athirady Tamil News

மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவு வெளியீடு..!!

0

நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஜே.இ.இ. முதன்மை தேர்வு அடிப்படையில் நடை பெறுகிறது. 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வு இரண்டு அமர்வுகளாக நடந்தது. முதலாவது அமர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஜூலை 10-ந் தேதி அறிவிக்கப்பட்டது. 2-வது அமர்வு தேர்வு ஜூலை 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்தது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 24 பேர் 100 சதவீத மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்து உள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.