;
Athirady Tamil News

குடிநீர் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி!!

0

குடிநீர் கட்டணத்தை உயர்த்த சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதன்படி, குடிநீர் கட்டணத்தில் திருத்தம் செய்வது குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

கடந்த 10 வருடங்களாக நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.