;
Athirady Tamil News

தேநீர் கட்டணத்தை செலுத்தினார் ரணில்!!

0

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், ஓகஸ்ட் 3 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்துக்குப் பின்னர், அக்கிராசன உரையை ஜனாதிபதி ஆற்றினார்.

அதன்பின்னர், பாராளுமன்றத்தில் தேநீர் உபசாரம் வழங்கப்பட்டது. அதற்கு 2 இலட்சத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் செலவானது. அதற்கான கட்டணத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது சொந்த நிதியில்​ செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவின் சார்பில் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் செயலாளரான ஆஷு மாரசிங்க இதற்கான கட்டணத்தை செலுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.