;
Athirady Tamil News

1,000 தியாகிகள் பெயர் தியாக சுவரில் பதிப்பு..!!

0

சுதந்திரத்துக்காக போராடிய 1,000 தியாகிகள் பெயர் தியாக சுவரில் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தியாக சுவர்
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் 75 நகரங்களில் சக்ரா பவுண்டேஷன் அமைக்கவுள்ளது. புதுவை கடற்கரை காந்தி சிலை பகுதியில் தியாகச் சுவருடன், கொடிக்கம்பம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது. அதாவது கடந்த மாதம் 100 அடி உயர கம்பம் நிறுவப்பட்டது. அதன்பின் சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளின் உருவ படங்கள் வரையப்பட்டது. தற்போது நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய 1,000 தியாகிகளின் பெயர்கள் தியாக சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

தியாகிகள் வரலாறு
அவற்றில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தியாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ‘கியூஆர் கோடு’ அமைக்கப்படுகிறது. அதன் மூலம் தியாகிகளின் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். இப்பணிகள் அனைத்தும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகள் முடித்த பிறகு பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.