;
Athirady Tamil News

மீளப்பெறப்பட்ட மனுக்கள்!

0

காலிமுகத்திடல் போராட்டக்குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களும் மீளப் பெறப்பட்டுள்ளன.

காலிமுகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேற கொழும்பு –கோட்டை பொலிஸாரால் விடுத்த அறிவிப்பை இடைநிறுத்த கோரி போராட்ட குழுவினரால் சமர்பிக்கப்பட்ட 4 மனுக்களும் இவ்வாறு மீளப் பெறப்பட்டுள்ளன.

உரிய சட்ட அனுமதி பெறப்படாமல் காலிமுகத்திடலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் நேற்று (10) வரையில் அகற்றப்படாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்திருந்தார்.

எனினும், குறித்த அறிவுறுத்தலை வலுவிழக்கச் செய்யுமாறு வலியுறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் 4 மனுக்கள் தாக்கல் செய்யபட்டிருந்தன. அந்த மனுக்களே இவ்வாறு மீளப் பெறப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.