;
Athirady Tamil News

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை திருடிய மற்றுமொருவர் கைது !!

0

ஜூலை மாதம் 13ஆம் திகதி பொல்துவ முச்சந்தியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைத் திருடிய மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் ஓட்டோ ஒன்றிலிருந்தே குறித்த , கண்ணீர்ப்புகைக் குண்டுகள் திருடப்பட்டிருந்தன.

பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என வெலிகட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.