;
Athirady Tamil News

புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு வழங்கும் ஒடிசா அரசு..!!

0

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசு தொகுப்பில் என்னவெல்லாம் இடம் பெறப்போகின்றன என கேட்கிறீர்களா? கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடும் கைப்புத்தகம், திருமண பதிவு சான்றிதழ் உள்ளிட்டவை இடம்பெறும். இதுபற்றி ஒடிசா மாநில குடும்ப கட்டுப்பாட்டு இயக்குனர் பிஜய் பானிகிரகி கூறுகையில், “இந்த திட்டம் தேசிய சுகாதார திட்டத்தின் அங்கம் ஆகும். இதன் நோக்கம், புதுமண தம்பதியருக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்” என குறிப்பிட்டார். இப்படி புதுமண தம்பதியருக்கு பரிசு தரப்போவது நாட்டிலேயே ஒடிசாவில்தான் முதல் முறையாக அரங்கேறப்போகிறது என்று தேசிய சுகாதார திட்டத்தின் ஒடிசா மாநில இயக்குனர் சாலினி பண்டிட் பெருமிதத்துடன் கூறினார். திருமணம் நடைபெறுகிற இடங்களுக்கே சென்று புதுமண தம்பதியருக்கு இந்த பரிசுத்தொகுப்பை வழங்கப்போகிறார்கள். ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு காலம் இடைவெளி விடுவது ஆரோக்கியமானது என்பது பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்வையும் புதுமண தம்பதியருக்கு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஆக, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஒடிசா இந்த வகையில் வழிகாட்டப்போகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.