;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 14,092 பேருக்கு கொரோனா..!!

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,092 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,040, டெல்லியில் 2,031 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 53 ஆயிரத்து 464 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16,454 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 9 ஆயிரத்து 566 ஆக உயர்ந்தது. தற்போது 1,16,861 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,403 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 41 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,27,037ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.