;
Athirady Tamil News

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்..!!

0

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது. நேற்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மிதமானமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வியாழக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.