;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 30 ஆயிரம் பக்தர்கள் காத்திருப்பு..!!

0

சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்ததால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தரிசன வரிசையில் காத்திருந்தனர். இதனால், திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது. நேற்று முன்தினம் கோவிலில் மொத்தம் 92 ஆயிரத்து 328 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 52 ஆயிரத்து 969 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 39 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு காத்திருந்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.