;
Athirady Tamil News

துணை ஜனாதிபதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு..!!

0

இந்தியாவின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கரை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காஷ்மீரின் முன்னாள்-முதல் மந்திரியுமான குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த தகவல் துணை ஜனாதிபதி அலுவலகத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலாம் நபி ஆசாத், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 23 பேர் குழுவில் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.