;
Athirady Tamil News

டேவிட் மெக்லாக்லன்-கார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.!!

0

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேசனை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்தார்.

இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்தேன் என டேவிட் மெக்லாக்லன்-கார் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஓகஸ்ட் 16ம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.