;
Athirady Tamil News

துபாயில் நடந்த ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் கேரள தொழிலாளிக்கு ரூ.10 கோடி பரிசு..!!

0

வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் என்பவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 50 லட்சம் திர்ஹாம் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 10 கோடி ஆகும். லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்ற ஷானவாஸ் கூறும்போது, வளைகுடா நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த 18 மாதங்களாக ஆன்லைன் லாட்டரி வாங்கி வந்தேன். இப்போது தான் பரிசு விழுந்துள்ளது. இந்த தொகையை கொண்டு எனது கடன்களை எல்லாம் அடைப்பேன். மீதி இருக்கும் பணத்தை வைத்து தொழில் தொடங்குவேன், என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.