;
Athirady Tamil News

கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தமாதம் 2-ந் தேதி முதல் 11-ந்தேதி வரை ஓணம் விடுமுறை..!!

0

கேரள அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி நடைபெறும் தேர்வுகள் முன்னதாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் வருகிற 24-ந்தேதி தொடங்கப்படுகிறது. முன்னதாக மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில், நாளை (அதாவது இன்று) பள்ளி, கல்லூரிகள் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.