;
Athirady Tamil News

படுகொலை செய்யப்பட்ட சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம்!! (படங்கள்)

0

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவரும், “நமது ஈழநாடு” பத்திரிகையின் பணிப்பாளருமான சி.சிவமகாரஜாவின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

முன்னதாக தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்திலுள்ள சி.சிவமகாரஜாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் உமாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2006 ஓகஸ்ட் 20 ஆம் திகதி சி.சிவமகாராஜா தெல்லிப்பளையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.