;
Athirady Tamil News

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!!

0

அம்பலாங்கொடை – தெல்துவவில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நேற்று (21) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது விருந்தகத்தின் மேல்மாடியில் 4 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரீ-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடையில் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.