;
Athirady Tamil News

வசந்தவை தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி அனுமதி!!

0

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி மாணவர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, ​​வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 15 பேர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதன்படி, வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சரின் அனுமதிக்கு உட்பட்டு, 90 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.