;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 10,649 பேருக்கு கொரோனா..!!

0

நாடு முழுவதும் புதிதாக 10,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 19-ந் தேதி பாதிப்பு 15,754 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்களாக பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 68 ஆயிரத்து 195 ஆக உயர்ந்தது. அதேநேரம் தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 10,677 பேர் குணமாகினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரத்து 301 ஆக உயர்ந்தது. தற்போது 96,442 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 64 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 36 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,27,452 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.