;
Athirady Tamil News

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பீகார் சபாநாயகர் ராஜினாமா..!!

0

பீகாரில் பா.ஜனதாவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் முறித்தார். அவர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியானார். நிதிஷ்குமார் அரசும் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக பீகார் சட்டசபை இன்று காலை கூடியது. பீகார் சபாநாயகர் விஜய் குமார் சின்கா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதாவை சேர்ந்த அவர் பதவி விலகியதோடு அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். இதற்கு மந்திரி விஜய் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.