;
Athirady Tamil News

அரிசி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு !!

0

5 இலட்சம் ஹெக்டேயருக்கும் அதிகளவில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த வருட இறுதி வரையில் அரிசிக்கான தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நெற் பயிர்ச் செய்கையை விரிவுப்படுத்தி அடுத்த வருடத்தில் அரிசி இறக்குமதியை நிறுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் உணவு, பணவீக்கப் பட்டியலில் இலங்கைக்கு 5ஆவது இடம் கிடைத்துள்ளமை கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.