;
Athirady Tamil News

டூயல் கேமரா அம்சம் அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்..!!

0

ஸ்னாப்சாட் செயலியில் டூயல் கேமரா எனும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பி என இரு கேமரா சென்சார்களையும் பயன்படுத்த முடியும். புது அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் பல்வேறு பரிணாமங்களை ஸ்னாப்சாட்டில் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் அனைவரும் மொமண்டில் பங்கேற்க முடியும். டூயல் கேமரா அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் ஸ்னாப்சாட் செயலியை திறந்து கேமரா டூல்பாரில் உள்ள புதிய ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பின் ஸ்னாப், ஸ்டோரிஸ் மற்றும் ஸ்பாட்லைட் வீடியோக்களை உருவாக்குவதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். துவக்கத்தில் டூயல் கேமரா அம்சம் நான்கு லே-அவுட்கள் இடம்பெற்று இருக்கும். டூயல் கேமரா அம்சத்துடன் மற்ற ஸ்னாப்சாட் அம்சங்களும் இடம்பெற்று இருக்கும். முதற்கட்டமாக இந்த அம்சம் ஸ்னாப்சாட் ஐஓஎஸ் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஐஒஎஸ்-ஐ தொடர்ந்து ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.