;
Athirady Tamil News

சந்தையில் பச்சிளம் குழந்தையின் தலை, கை கண்டெடுப்பு- போலீஸ் தீவிர விசாரணை..!!

0

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அருகில் உள்ள மார்க்கெட்டில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கை பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் இந்த உடல் பாகங்களை ஒரு துணியில் சுற்றி கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் உடல் பாகங்களை அம்மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் கண்டு போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாகங்களை மீட்டு பிணவறையில் வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் குழந்தையின் மற்ற உடல் பாகங்களை தேடிக் கொண்டிருப்பதாக நகர காவல் கண்கானிப்பாளர் துஷார் சிங் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.